Sunday, 26 February 2023

இயேசு மரம் 6 - இயேசு சோதிக்கப்படுதல்

இயேசு மரம் 6

இயேசு சோதிக்கப்படுதல்

தவக்காலத்தின் முதல் வார திங்கள்

 


விவிலிய வாசகம்: 

இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார். சோதிக்கிறவன் அவரை அணுகி, 'நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்' என்றான். அவர் மறுமொழியாக் ''மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல் மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்' என மறைநூலில் எழுதியுள்ளதே' என்றார். பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, ';நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; 'கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்' என்று மறைநூலில் எழுதியுள்ளது' என்று அலகை அவரிடம் சொன்னது. இயேசு அதனிடம்: ''உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம்' எனவும் எழுதியுள்ளதே' என்று சொன்னார். மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி, அவரிடம், 'நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்' என்றது. அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, 'அகன்று போ, சாத்தானே,'உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது' என்றார். பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர். (மத் 4:1-11)

சிந்தனை: 

பாலை வனத்தில் சாத்தான் இருப்பது போன்ற அடையாளமானது பிசாசு இருப்பது உண்மை என்றும் அது நம்மை இறைநம்பிக்கையை இழக்கச் செய்யும் என்றும் நினைவூட்டுகிறது. 

திருமுழுக்கு பெற்ற உடனேயே இயேசு தூய ஆவியாரால் பாலைவனத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு அவர் சாத்தானால் சோதிக்கப்படுகிறார். பலர் சாத்தானைப் பற்றி பேச விரும்புவதில்லை. சாத்தான் என்பவன் இல்லை உன்று பலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் சாத்தான் என்பவன் இருக்கிறான். அவன் இயேசுவையும் சோதித்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. 

சாத்தான் இயேசுவை உணவின் மூலமும், தன்னுடைய மகிமையை வெளிப்படுத்தும்படி தற்பெருமை பாராட்டும் தன்மை மூலமும் இறுதியில் அவருடைய வல்லமையைக் குறித்தும் சோதிக்கிறான்.

ஆனால் இச்சோதனைகள் அனைத்திற்கும் இயேசு திருவிவிலியப் பகுதிகளை மேற்கோள் காட்டி பதிலளிக்கிறார். இவ்விடத்தில் இயேசு தன்னுடைய அறிவையோ அல்லது மனித பலத்தையோ பயன்படுத்தாமல் இறைவார்த்தைகளைப் பயன்படுத்தி சாத்தானை வெற்றிக் கொள்கிறார். அதன் முடிவில் சாத்தான் அவரை விட்டு அகன்று போனது.

இதன் மூலம் சாத்தானையும் அவனுடைய எல்லா சோதனைகளைக் காட்டிலும் கடவுள் வலிமையானவர் என்பதை இயேசு எடுத்தியம்புகிறார். மேலும் கடவுள் மீது கொண்டுள்ள அளவில்லா அன்பின் பொருட்டு நமக்கு ஏற்படும் பசி, தாழ்த்தப்படுதல், பலமின்மை போன்றவை நன்மைக்கே என்பதையும் இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

செபம்:

ஓ இயேசுவே! சோதனைகள் வரும்போது கடவுள்மீதுள்ள நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தருளும். சாத்தானின் தீவினைகளிலிருந்தும் கண்ணிகளிலிருந்து என்னைக் காத்தருளும். ஆமென்.