திருவருகைக் கால முதல் வார புதன்
ஆபிரகாம்
வாசகம்: தொடக்க நூல் 12:1-7, 15:1-6
சிந்தனை:நம்பிக்கையின் தந்தை என்றழைக்கப்படும் ஆபிரகாம் தான் வாழும் விட்டையும் நாட்டையும் விட்டு தனக்கு அறிமுகமில்லாத வேறொரு புதிய நாட்டிற்கு செல்ல கடவுளால் கட்டளையிடப்பட்டார். அவர் பெரிய இனத்திற்கு தந்தையாகவும், அவருடைய வழிமரபினரால்; உலக நாடுகள் ஆசி பெரும் என்றும் கடவுள் அவருக்கு வாக்களித்தார். தான் வயது முதிர்த்த போதிலும், சாராவால் கருவுற இயலாத போதிலும் கடவுளுடைய வாக்குறுதியில் நம்பிக்கைக் கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார். (தொநூ 15:6)
கடவுள் அளித்த வாக்குறுதியின் பயனாக முதிர்ந்த வயதில் தான் பெற்றுக் கொண்ட பிள்ளையை கடவுள் பலியாகக் கேட்ட போது ஆபிரகாமின் நம்பி;க்கை ஆழமாக சோதிக்கப்பட்டது. இறைப்பராமரிப்பில் நம்பிக்கைக் கொண்டு ஆபிரகாம் கீழ்ப்படிந்தார், ஆகையால் கடவுள் ஈசாக்கிற்கு பதிலாக ஆட்டுக்கிடாவை பலியிட வழங்கினார். இச்செயல், உலகின் மீட்புக்காக தம்முடைய ஒரே மகனாகிய இயேசுவை பலியாக அளித்த கடவுளின் உயர் தியாகத்தை முன்னறிவித்தது.
ஆபிரகாமின் வாழ்வு கடவுளோடு நாம் கொண்டுள்ள உறவில் நம்பிக்கை வைத்து கீழ்ப்படிதலோடு வாழ்வதற்கான முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டுகிறது. முன்னோக்கி செல்லும் பாதை தெளிவற்றதாகவோ அல்லது சவாலாகவோ இருக்கும்போது, கடவுளின் வாக்குறுதிகளில் ஆபிரகாம் வைத்த அசைக்க முடியாத நம்பிக்கை ஒரு எடுத்துக்காட்டு.
செபம்:
விண்ணகத் தந்தையே இறைவா! நீர் அளித்த வாக்குறுதிகள் சாத்தியமற்றதாகத் தோன்றினாலும் அதில் நம்பிக்கை வைத்த ஆபிரகாமின் எடுத்துக்காட்டிற்காக நன்றி. உமது வாக்குறுதிகளுக்கு நீர் எப்போதும் உண்மையாக இருக்கிறீர் என்பதை அறிந்து, கீழ்ப்படிதலோடும், நம்பிக்கையோடும் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றி வாழ உதவிபுரியும். ஆமென்.
