Saturday, 10 December 2022

ஈசாய் மரம் - திருவருகைக்கால இரண்டாம் வார சனி

 திருவருகைக்கால இரண்டாம் வார சனி

தாவீது

வாசகம்: 2 சாமுவேல் 5:1-5, 7:1-17

சிந்தனை:

ஈசாயின் மகனான தாவீது ஒரு எளிமையான ஆயன். இஸ்ரயேலின் அரசராக கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர். சாமுவேல் அவரை அருட்பொழிவு செய்த போது கடவுள் 'மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்ளூ ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்.' என்று கூறினார். தாவீது கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கையும் இதயப்பற்றுதலும் அவனை மற்ற அனைவரைக் காட்டிலும் வேறுபடுத்திக் காட்டியது.

கோலியாத்துடனான தாவீதின் போர் அவரது வாழ்வில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. உருவத்திலும் உடல் வலிமையிலும் மிகுந்த பிலிஸ்த்திய வீரானான கோலியாத்தை வெறும் கவன் கொண்டும் ஐந்து கற்களைக் கொண்டும் அவர் வீழ்த்தினார். இதன் மூலம் இறைநம்பிக்கை இருந்தால் எந்த சவலானாலும் அது பெரிதல்ல என்று நிரூபித்துக் காட்டினார். ஆவர் வெளிப்படுத்திய தைரியம் அவரிடம் இருந்து வந்தது அல்ல, மாறாக தான் நம்பிக்கை வைத்திருந்த கடவுளிடமிருந்து வந்தது.

தாவீத மிகப் பெரிய அரசராகவும், இசை வல்லுநராகவும் ஆனார். திருப்பாடல்கள் பலவற்றினை எழுதியவரும் அவரே. என்னதான் தாவீது தவறுகள் பல செய்த பலவீனமுள்ள மனிதரானாலும், தன் தவற்றினை உணர்ந்து நொறுங்கிய உள்ளத்தினனாய் ஆண்டவரின் திரும்பிச் செல்ல தயங்கவில்லை. ஆண்டவர் தாவீதுக்கு அவரது ஆட்சிக்கு முடிவே இராது என்று வாக்களித்தார். அதன் நிமித்தம் எல்லா காலத்துக்கும் அரசரான இயேசுவை அவரது வழிமரபில் பிறக்கச் செய்தார். தாவீது அரசரின் வாழ்வு நம்பிக்கை, தைரியம், மனமாற்றம், இறைப்பற்று ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நமக்குக் கற்பிக்கிறது. 


செபம்:

விண்ணகத் தந்தையே இறைவா! உமது ஆற்றலில் நம்பிக்கை வைத்து உமது அன்பை நாடிய உம் நம்பிக்கையுள்ள ஊழியனான தாவீதின் வாழ்வை எடுத்துக்காட்டாக அளித்ததற்கு நன்றி. எங்கள் வாழ்வில் நாங்கள் எதிர்கொள்ளும் சவால்களை நம்பிக்iயுடன் எதிர்கொள்ளவும், நாங்கள் தோல்வியுறும் போது உம்மிடம் திரும்பி திருந்தி வரவும் உதவி புரியும். எங்கள் வாழ்வால் உம்மைப் போற்றும் வரம் தாரும். ஆமென்.