திருவருகைக்கால முதல் வார சனி
யோசேப்பு
வாசகம்: தொடக்க நூல் 37 - 39
சிந்தனை:
யாக்கோபின் பன்னிரு புதல்வர்களுள் கடைசியாகப் பிறந்தவர் யோசேப்பு. யோசேப்பின் வாழ்வு விடாமுயற்சி, இறைநம்பிக்கை, இறைப்பராமரிப்பு ஆகியவற்றை சிறப்பாக எடுத்தியம்புகிறது. தான் பெற்ற புதல்வர் அனைவரிலும் யோசேப்பின் மீதே யாக்கோபு அதிக அன்பு வைத்திருந்தார். அவருக்கு அலங்கரிக்கப்பட்ட அழகு நிறைந்த அங்கியை பரிசாக அளித்தார். அதுவே இன்றைய அடையாளமாகவும் விளங்குகிறது. இது அவரது சகோதரர்கள் மத்தியில் பொறாமையை தூண்டியது. ஆகையால் அவரைக் காட்டிக்கொடுத்து, எகிப்தில் அடிமையாக விற்றார்கள். அடிமைத்தனம், பொய்க் குற்றச்சாட்டுகள் மற்றும் சிறைவாசம் போன்ற துன்பங்களால் சூழப்பட்டடிருந்தாலும், யோசேப்பு இறைத்திட்டத்தில் நம்பிக்கைக் கொண்டு கடவுளுக்கு உண்மையாக இருந்தார்.
கடவுளின் வழிகாட்டுதலின் மூலம், யோசேப்பு எகிப்தில் உயர்ந்த பதவியை அடைந்தார். அங்கு அவர் கடுமையான பஞ்சம் ஏற்பட்ட போது பலரைக் காப்பாற்றினார். அவர் தனது சகோதரர்களுடன் மீண்டும் சேர்ந்த போது, கடவுள் அவர்களின் செயல்களை நன்மைக்காகப் பயன்படுத்தினார் என்பதை உணர்ந்து 'நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள். ஆனால் கடவுள் அதை .... நன்மையாக மாற்றிவிட்டார்.' (தொநூ 50:20) என்று கூறி யோசேப்பு அவர்களை மன்னித்தார்.
யோசேப்பின் வாழ்க்கை இயேசுவை பிரதிபலிக்கிறது. அவருக்கும் துரோகம் இழைக்கப்பட்டது. அவரும் துன்பப்பட்டார், ஆனால் மனிதகுலத்திற்கு மீட்பையும் மன்னிப்பையும் கொண்டு வந்தார். வாழ்க்கை நியாயமற்றதாகத் தோன்றினாலும், கடவுளின் திட்டத்தில் நம்பிக்கை வைக்கவும், கடவுள் நம்மை மன்னிப்பது போல மற்றவர்களுக்கும் மன்னிப்பை வழங்கவும் யோசேப்பின் வாழ்வு நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.
செபம்:
அன்பின் இறைவா! உமது திட்டத்தில் நம்பிக்கை வைத்து, தனக்கு அநீதி இழைத்தவர்களை மன்னித்த யோசேப்பின் முன்மாதிரியான வாழ்க்கைக்காக நன்றி கூறுகின்றோம். கடினமான காலங்களில் உம்மீது நம்பிக்கை வைக்கவும், மற்றவர்களிடம் மன்னிப்பையும் அன்பையும் காட்டவும் எங்களுக்கு உதவு புரியும். ஆமென்.
