திருவருகைக்கால நான்காம் ஞாயிறு
திருமுழுக்கு யோவான்
வாசகம்: லூக்கா 1: 57-66, 3: 1-20, 7: 18-30
சிந்தனை:
எலிசபெத்து, திருமுழுக்கு யோவானின் தந்தையும், எருசலேம் ஆலய குருவுமான செக்கரியாவின் மனைவியாவார். அவர் ஒரு நேர்மையுள்ள பெண்ணாக இருந்தார். நீண்ட காலமாக மகப்பேறு வேண்டி இறைவேண்டல் செய்து காத்து வந்தார். ஆனால் அவருடைய வயதான காலத்தில், அவரால் கருத்தரிக்க முடியவில்லை. கபிரியேல் வானதூரன் செக்கரியாவைச் சந்தித்து, எலிசபெத்துக்கு முதிர்வயதிலும் ஒரு மகன் பிறப்பார் என்று வாக்குறுதி அளித்தபோது, எலிசபெத்து அதை தாழ்மையுடன் கடவுளின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டார், 'ஆண்டவர் என்மீது அருள்கூர்ந்து இந்நாளில் இவ்வாறு செய்தருளினார்' (லூக்கா 1:25) என்று தமக்குள் சொல்லிக்கொண்டார்.
இயேசுவைக் கருத்தாங்கிய கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்து வாழ்த்திய போது எலிசபெத்தின் வயிற்றிலிருந்த திருமுழுக்கு யோவான் மீட்பரின் பிரசன்னத்தை உணர்ந்து மகிழ்ச்சியால் துள்ளினார். (லூக்கா 1:41-44). 'பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்ளூ உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!' என்று எலிசபெத்து கூறிய வார்த்தைகள் அருளின் வெளிப்பாடாக இருந்தது. எலிசபெத்தின் கன்னி மரியாவையும் அவரது குழந்தையையும் இனங்கண்ட நிகழ்வு இயேசு பிறப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிய அவருடைய ஆழமான நம்பிக்கையையும் புரிதலையும் காட்டுகிறது.
எலிசபெத்தின் வாழ்வு நம்பிக்கை, பொறுமை மற்றும் பணிவு ஆகியவைப் பற்றி நமக்குக் கற்பிக்கிறது. ஒரு குழந்தைக்காக அவர் நீண்ட காலம் காத்திருந்த போதிலும், அவர் கடவுளின் திட்டத்தை நம்பினார், அது அவர் கற்பனை செய்ததை விட மிகப் பெரியதாக இருந்தது. கடவுளின் மீட்புத் திட்டத்தில் பெண்களின் பங்களிப்பையும் கடவுளது அழைப்புக்கு அவர்களின் உண்மையுள்ள பதிலையும் எலிசபெத்தின் வாழ்வு எடுத்துக்காட்டுகிறது.
செபம்:
ஆண்டவரே, உமது திட்டத்தில் நம்பிக்கை வைத்து உமது ஆசீர்வாதங்களில் மகிழ்ச்சியுற்ற எலிசபெத்தின் நம்பிக்கையான வாழ்வுக்காக நன்றி. உமது திட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து, எங்கள் வாழ்வில் உமது விருப்பத்தை தாழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள எங்களுக்கு உதவு புரியும். ஆமென்.
