திருவருகைக்கால இரண்டாம் வார வியாழன்
ரூத்து
வாசகம்: ரூத்து 1:1-18
சிந்தனை:
ரூத்தின் வாழ்வு இறைநம்பிக்கை, அன்பு, மீட்பு ஆகியவற்றை எடுத்தியம்புகிறது. மோவாபியப் பெண்ணான ரூத்து தன் கணவன் இறந்த பிறகு, 'உம்மோடு வராமல் உம்மை விட்டுப் பிரிந்து போகும்படி என்னை நீர் வற்புறுத்த வேண்டாம். நீர் செல்லும் இடத்திற்கே நானும் வருவேன்ளூ உமது இல்லமே எனது இல்லம்ளூ உம்முடைய இனமே எனது இனம்ளூ உம்முடைய தெய்வமே எனக்கும் தெய்வம். (ரூத்து 1:16) தன் மாமியார் நகோமியுடன் மனமுவந்து தங்கினாள். ரூத்து வெளிப்படுத்திய நம்பிக்கை அவரை பெத்லகேமில் ஒரு புதிய வாழ்க்கைக்கு இட்டுச் சென்றது, அங்கு அவர் தனக்கும் நகோமிக்கும் தேவையான தானியங்களை வயல்களிலிருந்து சேகரித்தார்.
இறைப்பராமரிப்பினால் ரூத்து போவாசை சந்தித்தார். போவாசு ஒரு கனிவுள்ள தாராள மனம் படைத்த மனிதராக இருந்தார். அவர் ரூத்தை திருமணம் செய்துகொண்டு அவ்வுறவு நிலையின் வழியாக அவருடைய குடும்பத்தின் எதிர்காலத்தை மீட்டெடுத்தார். இதன் காரணமாக ரூத்து தாவீது மன்னரின் கொள்ளுப் பாட்டி ஆகி, இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியலில் இடம் பெற்றார். கடவுள் தனது மீட்பின் திட்டத்தில் ஆள் பார்த்து செயல்படுவதில்லை என்பது இதிலிருந்து புலப்படுகிறது.
ரூத்தின் வாழ்வு நம்பகத்தன்மை, இரக்கம், இறைப்பராமரிப்பு ஆகியவற்றைப் பற்றி நமக்குக் கற்பிக்கிறது. இழப்பிலிருந்து இறையருளை நோக்கிய அவரது பயணம், கடவுள் தம்முடைய மீட்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கு நம்முடைய வாழ்க்கைப் போராட்டங்களின் வழியாகவும் செயல்படுகிறார் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
செபம்:
அன்பின் இறைவா! வாய்மை, இரக்கம், நம்பிக்கை ஆகிய நற்குணங்களை வெளிப்படுத்திய ரூத்தின் முன்மாதிரியான வாழ்வுக்காக நன்றி. உமது பராமரிப்பில் நம்பிக்கை வைத்து, உமக்கும் நாங்கள் நேசிப்பவர்களுக்கும் உண்மையாக இருக்க எங்களுக்கு உதவு புரியும். ஆமென்.
